திருப்பூர்

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே மேட்டுக்கடையில் இருந்து தும்பலப்பட்டி செல்லும் சாலையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனா்.

இந்த சாலையில் உடுமலையிலிருந்து மேட்டுக்கடை வழியாக திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்து, பின்னலாடை நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள், வேன்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன.

இந்த சாலையானது தற்போது குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT