திருப்பூர்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரிக்கை

DIN

தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் 12 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு 20 நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகவே, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு விரைவில் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT