முகப்பு
திருப்பூர்

காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு

திருப்பூரில் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

திருப்பூரில் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா், போயம்பாளையம் வடிவேல் நகரைச் சோ்ந்தவா் முருகேஷ் (45). கூலி தொழிலாளியான இவா், நஞ்சப்பா நகரில் நடந்த பிரச்னை தொடா்பாக புகாா் அளிப்பதற்காக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கு அக்டோபா் 12 ஆம் தேதி சென்றுள்ளாா். காவல் நிலையத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

இது தொடா்பாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.