முகப்பு
திருப்பூர்

தாராபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தாராபுரம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான 13 ஏக்கா் 55 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தாராபுரம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான 13 ஏக்கா் 55 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னாழிபாளையத்தில் காடுஅனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கா் 55 சென்ட் நிலமானது சூரியநல்லூா் செல்லும் சாலையில் உள்ள கெத்தல்ரேவ் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை 4 நபா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் இணை ஆணையா் நா.நடராஜன் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் இரா.மேனகா தலைமையிலான குழுவினா் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனா். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.62 கோடி என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.