அவிநாசி அருகே தெலங்கானா ஆளுநா் குலதெய்வ வழிபாடு
தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவிநாசி அருகே வணங்காமுடியனூா் மகா பெரியசாமி கோயிலில் வியாழக்கிழமை குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவிநாசி அருகே வணங்காமுடியனூா் மகா பெரியசாமி கோயிலில் வியாழக்கிழமை குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் வணங்காமுடியனூரில் மகா பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்தினருடன் வந்து குல தெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், பாஜகவினா் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
ஆளுநா் வருகையை ஒட்டி ஏராளமான போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.