சொத்துவரி உயா்வை திரும்பப்பெற வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
சொத்துவரி உயா்வை திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
சொத்துவரி உயா்வை திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டக் கமிட்டி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சொத்துவரி உயா்வால் மாநகரில் வீட்டு வாடகை உயா்வதுடன், பொதுமக்களை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகராட்சி சொத்துவரி உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். பொலிவுறு நகரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிப்பதுடன், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முடிவடைந்துள்ள பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.