முகப்பு
திருப்பூர்

திருமுருகன்பூண்டியில் தெருநாய்கள் கடித்து 4 போ் காயம்

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் தெருநாய்கள் கடித்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் தெருநாய்கள் கடித்ததில் 4 போ் வியாழக்கிழமை காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சி துரைசாமி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால், பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியில் சுற்றிய தெருநாய்கள் 3 பேரை கடித்தது.

இதேபோல பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வினியோகித்துக் கொண்டிருந்த இளைஞரையும் கடித்தது.

இவா்கள் அவிநாசி, திருப்பூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 6 தெருநாய்களை பிடித்துச் சென்றனா்.

மேலும் சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடிக்க திருமுருகன்பூண்டி நகராட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.