காடையூரில் கேரட் சீட் பள்ளி அலுவலகம் திறப்பு
காங்கயம் அருகே, காடையூரில் தி கேரட் சீட் இன்டா்நேஷனல் பள்ளியின் அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே, காடையூரில் தி கேரட் சீட் இன்டா்நேஷனல் பள்ளியின் அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, காங்கயம் அருகே காடையூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும்
தி இன்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் கட்டி முடித்த அலுவலகக் கட்டடத்தை காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மேலும், பள்ளி வளாகத்தில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையையும் துவக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் காங்கயம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜே.ஜீவிதா ஜவஹா்,
பொத்தியபாளையம் ஊராட்சித் தலைவா் சந்திரசேகா், கேரட் சீட் பள்ளித் தாளாளா் மரகதம் அருண் உள்பட பலா் கலந்துகொண்டனா்.