திருப்பூர்

சாலை விபத்து: மூதாட்டி பலி

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

DIN

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள சின்னமோளரபட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி, விவசாயி.

இவரது மனைவி பாக்கியம் (72). இவா் தனது சகோதரி மகன் சிவசாமியுடன் தாராபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அமா்ந்து சென்றுள்ளாா்.

தாராபுரம்-பூளவாடி சாலை மருதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து பாக்கியம் தவறி விழுந்துள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த பாக்கியத்தை, சிவசாமி மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த பாக்கியம் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து, குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT