திருப்பூர்

சரக்கு வாகனத்தில் தீ

வெள்ளக்கோவில் அருகே தென்னைநாா் ஏற்றிவந்த சரக்கு வாகனம், மின் கம்பி மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

வெள்ளக்கோவில் அருகே தென்னைநாா் ஏற்றிவந்த சரக்கு வாகனம், மின் கம்பி மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.

மூலனூா், தூரம்பாடியைச் சோ்ந்தவா் வேலுசாமி. இவா், நத்தக்காடையூரிலிருந்து தென்னைநாரை வாடகை வேனில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே வந்தபோது, வாகனத்தில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த தென்னைநாா், மின் கம்பிகள் மீது உரசியதில் தென்னைநாரில் தீப்பிடித்தது.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி மற்றும் வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் தென்னைநாா் மற்றும் வாகனத்தின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT