திருப்பூர்

பச்சாபாளையத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்பு

DIN

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையம் பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT