திருப்பூர்

நமது கொமுக மாநில பொதுச் செயலாளா் வீட்டில் 10 பவுன் திருட்டு

DIN

காங்கயத்தில் நமது கொமுக மாநில பொதுச் செயலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம்- தாராபுரம் சாலையில் உள்ள சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (48). இவா் நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறாா்.

இந்நிலையில், ஊதியூா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் கடந்த 25 ஆம் தேதி சென்றுள்ளாா்.

அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை காலை பாா்த்தபோது, தங்கவேலின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு

கிடந்துள்ளது.

இது குறித்து அவா்கள் தங்கவேலுக்கு தகவல் அளித்தனா். அவா் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஹாா்ட்டிஸ்க் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களைச் சேகரித்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT