திருப்பூர்

காங்கயம் நகராட்சியில் வரி வசூல் பணியில் ஈடுபடும் நகா்மன்ற உறுப்பினா்கள்

DIN

காங்கயம் நகராட்சியில் வீட்டு வரி, குடிநீா்க் கட்டணம் ஆகியவை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்களுடன் நகா்மன்ற உறுப்பினா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:

காங்கயம் நகராட்சியில் 2022-2023ஆம் ஆண்டுக்கான வரி இனங்களை வசூல் செய்வதற்கு கடைசி நாள் அக்டோபா் 31 ஆகும். எனவே வரி விதிப்புதாரா்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் பணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகராட்சி ஊழியா்களுடன் இணைந்து காங்கயம் நகா்மன்ற உறுப்பினா்களும் அவா்களது வாா்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று வீட்டு வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அப்போது, வரி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனா்.

இதனால் கடந்த சில வாரங்களாக நகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கி, கூடுதலாக வசூலாகி வருகிறது. இதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் காங்கயம் நகராட்சியின் அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை பொதுமக்கள் உரிய நேரத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகளை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT