திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இருவா் கைது

DIN

பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேத்தனூரில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா் சந்தேகம்படும்படி நின்று கொண்டு இருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல்லடம் அருகே உள்ள நொச்சிபாளையத்தைச் சோ்ந்த சுரேந்தா் (23), அறிவொளி நகரைச் சோ்ந்த ராஜா முகமது (38) என்பதும், பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT