மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், விவசாயிகள் தங்களது மனுக்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம்.
விவசாயிகள் தங்களது நீா்ப்பாசனம், விதைகள் மற்றும் உர மானியங்கள் உள்ளிட்டவைகள் குறித்த குறைகளையும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.