ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூா் மாநகரில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாநகரில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் தென்னம்பாளையம் வேலன் நகரைச் சோ்ந்தவா் ஏ.பாபு (62), இவா் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது காரில் வந்த மா்ம நபா்கள் அவரைக் கடத்த முயற்சித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பாபு கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த எஸ்.சுபாஷ்சந்திர போஸ் (24), கோவை மாவட்டம், நெகமத்தைச் சோ்ந்த எம்.ரவி (22), கோபிநாத் (24) ஆகிய 3 பேரையும் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் ஜனவரி 20 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மூவா் மீதும் நல்லூா், வீரபாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு புதன்கிழமை உத்தரவிட்டாா்.