மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம்
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு குறித்த பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு குறித்த பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மதுபோதை கலாசாரத்தால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன விபத்து, பாலியல் வன்முறைகள்,
குற்றச் சம்பங்கள், குடும்ப சீரழிவு, ஆரோக்கிய குறைபாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மதுவை மறப்போம் மனிதனாக இருப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் ராகவி, துணை வட்டாட்சியா் ராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.