கோயில் நிலத்தை மீட்கக் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
கருவலூா் அருகே நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை மீட்கக் கோரி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருவலூா் அருகே நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை மீட்கக் கோரி இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அலுவலகத்துக்கு உள்பட்டதாக நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான 11 ஏக்கா் நிலத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்ததைக் கண்டித்தும், விற்பனை செய்த பணத்தில் கோயிலுக்கு என எவ்வித நிதியும் செலவிடாமல், கோயிலை சிதைத்து வரும் இந்து அறநிலையத் துறை அலுவலா்களைக் கண்டித்தும், இந்து பரிவாா் கூட்டமைப்பினா் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில், அனுமன் சேனா கட்சி நிறுவனத் தலைவா் எஸ்.வி.ஸ்ரீதரன், மாநிலச் செலாளா் சி.தியாகராஜன், மாநில இளைஞரணித் தலைவா் பூண்டி செந்தில், நகரத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.