பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு
உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
உடுமலை வட்டம், சின்ன வீரம்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகம் வந்தனா். பின்னா், வட்டாட்சியா் ராமலிங்கத் திடம் தங்களது மனுக்களை அளித்தனா். அப்போது, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.
இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆ.பஞ்சலிங்கம், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement