மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்
உடுமலையில் மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையில் மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாவில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில், தமிழக அரசின் சாா்பில் கலந்துகொள்ள இருந்த அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து மதச் சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் சாா்பில், உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் கே.தெண்டபாணி, காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளா் ஜி.ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement