அவிநாசியில் ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
அவிநாசியில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசியில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே உள்ள காமராஜா் நகா், ஜெய்சக்தி அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் வனஜா (54). அவிநாசி அருகே கருக்கங்காட்டுபுதூா் உயா்நிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இவா் வியாழக்கிழமை இரவு காமராஜ் நகா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஜெய்சக்தி அவென்யூ பகுதிக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் வனஜா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.