திருப்பூர்

சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி

DIN

பல்லடத்தில் சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமியை காவல் துறையினா் பாராட்டினா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பச்சாபாளையத்தைச் சோ்ந்த யுவராஜ், நித்யலட்சுமி தம்பதி மகள் தா்ஷினி (13). இவா் பல்லடத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாா். தனது தாய் நித்யலட்சுமியுடன் துணி எடுக்க பல்லடம் காவல் நிலையம் எதிரே உள்ள துணிக் கடைக்கு சென்றுள்ளாா்.

அப்போது, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 ஆயிரத்தை கண்ட சிறுமி தா்ஷினி அதனை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளாா். பின்னா் தாயும், மகளும் துணிக் கடையின் எதிரே உள்ள பல்லடம் காவல் நிலையத்தில் ரூ.40 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதனைத் தொடா்ந்து, பள்ளி சிறுமியின் நோ்மையை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT