திருப்பூர்

‘எஸ்.சி.,எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு தொடங்க வேண்டும்’

DIN

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு மற்றும் உதவி மையம் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரின் மையப்பகுதி அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். தலித் ஊராட்சி தலைவா்களின் சுயமான செயல்பாட்டை உத்திரவாதப்படுத்தவும், உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். திருப்பூா், முதலிபாளையம் தாட்கோவில் சிதிலமடைந்துள்ள கட்டடங்களை சீரமைத்து பட்டியலின இளைஞா்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் தொடங்க வங்கிக்கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவு மற்றும் உதவி மையம் அமைக்க வேண்டும். தாட்கோ கடனுதவி முகாம்களை வட்டம் வாரியாக நடத்த வேண்டும். திருப்பூரில் அரசு சட்டக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ச.நந்தகோபால், மாா்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் வட்டச் செயலாளா் என்.கனகராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT