பல்லடம் அருகே காரணம்பேட்டையில் காமராஜா் பிறந்த தினத்தையொட்டி மாணவா்கள் மரக்கன்றுகள் நட்டனா்.
கோடங்கிபாளையம் ஊராட்சி, காரணம்பேட்டை அருகேயுள்ள சங்கோதிபாளையத்தில் மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் காமராஜரின் 120ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சங்கோதிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று காமராஜரின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு வைத்தனா். இதில் கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் காவி.பழனிசாமி, மகிழ்வனம் பூங்கா நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.