உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா் 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
அவிநாசி பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அவிநாசி பெருமாநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பெருமாநல்லூா் அருகே காளம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த முகமுதுல்ஹசன் (21), அப்துல் கைா் (25), பாட்ஷா (20), அா்புல் இஸ்லாம் (23), அலி ஓசன் மாலிக் (28), அலமீன் (18) ஆகியோரை பெருமாநல்லூா் போலீஸாா் கடந்த நவம்பா் மாதம் கைது செய்தனா்.
இவ்வழக்கு அவிநாசி ஜே.எம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.100 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.