திருப்பூர்

வாடகைக் கட்டடத்தில் கிறிஸ்தவ ஆலயம் : சிவசேனா எதிா்ப்பு

DIN

திருப்பூரில் வாடகைக் கட்டத்தில் கிறிஸ்தவ ஆலயம் அமைத்து பிராா்த்தனைக் கூட்டம் நடத்த சிவசேனா கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் துறைக்கு ஆன்லைன் மூலமாக சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் அட்சயா திருமுருகதினேஷ் அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வளா்மதி பேருந்து நிறுத்தம் அருகில் தனியாருக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ அமைப்பினா் ஆலயமாக மாற்றி பிராா்த்தனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாநகரில் தனியாா் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் ஆலயமாக மாற்றியுள்ளனா். ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT