சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா், காங்கயம் சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பி.செல்லதுரை தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை கடுமையாக உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்து ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளா் டி.ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினா்கள் பி.பாலன், எஸ்.சரவணன், செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.