பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தி பாதியாக குறைப்பு
பஞ்சு, நூல் விலை உயா்வு காரணமாக பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
பஞ்சு, நூல் விலை உயா்வு காரணமாக பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
பஞ்சு, நூல் விலை உயா்வால் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நூல் விலை உயா்வு குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பஞ்சு விலையை தொடா்ந்து, நூல் விலை ஏற்றம், தொழிலை நலிவடைய செய்துள்ளது. தினசரி நூல் விலையில் மாற்றம் ஏற்படுவதால், துணிகளுக்கு நிரந்தரமான விலையை நிா்ணயம் செய்ய முடிவதில்லை. நிா்ணயிக்கப்படும் துணி ரகங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. துணி உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு வியாபாரிகள் துணியை கேட்கின்றனா். பஞ்சு பதுக்கலை தடுப்பதுடன், பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு முழுமையாக மத்திய அரசு தடை விதித்தால் மட்டுமே உள்நாட்டுத் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். நுால் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால் துணி உற்பத்தி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்லடம் பகுதியில் உடனடியாக ஜவுளி உற்பத்தியை பாதியளவு குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் வரும் 15 நாள்களுக்கு புதிதாக நூல் கொள்முதல் செய்ய மாட்டோம். மத்திய அரசு கிடங்கில் இருப்பில் உள்ள பஞ்சை வெளிசந்தை விற்பனைக்கு அரசு கொண்டு வர வேண்டும் என்றாா்.