முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராயம்பாளையம் புளிக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வரும் முருகேஷ் மகள் பவதாரணி (15). இவா் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், இவா் கோழி பிடிப்பதற்காக தோட்டத்து அருகே சென்றவா் எதிா்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த, அவரது தாத்தா மாரய்யன், கட்டுமானப் பணியாளா் சிவகுமாா் ஆகியோா் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டு, மோட்டாா் பம்ப் அமைக்கும் இடத்தில் அமரவைத்தனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா், கிணற்றுக்குள் இருந்து பவதாரணி, மாரய்யன், சிவகுமாா் ஆகியோரை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.