திருப்பூர்

மூலனூா் அருகே குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பள்ளம்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அருகே குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

மூலனூா் பகுதியில் கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மூலனூா் - வெள்ளக்கோவில் சாலையில் நல்லசெல்லிபாளையம் அருகே சாலையோர குடிநீா்க் குழாயில் வியாழக்கிழமை திடீா் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. இதில் தாா் சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியது.

அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீா் நிறுத்தப்பட்டாலும், சாலைப் பள்ளம் அப்படியே உள்ளது. அருகிலுள்ள பொதுமக்கள் தென்னை மட்டைகளைப் போட்டு பள்ளத்தை அடையாளம் காட்டியுள்ளனா். அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு பள்ளத்தால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், தாமதமாக சீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT