திருப்பூர்

பல்லடத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு

DIN

 பல்லடத்தில் 3 மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

இது குறித்து பல்லடம் உயா் தொழில் நுட்ப நெசவு பூங்காவில் இயங்கி வரும் லோ்நெட் திறன் வளா்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு 3 மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எஸ்.சி. வகுப்பு மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சியை விடுதியில் தங்கி மட்டுமே பெற முடியும். பயிற்சி வகுப்பில் சேருபவா்களுக்கு வேலைவாய்ப்பு, தங்குமிடத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இலவச பயிற்சி, உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஆங்கிலம், கணினி அடிப்படை திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேர பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 5, ஆதாா் காா்டு நகல் - 2, பள்ளி மாற்றுச் சான்றிழ் நகல் -2, ஜாதிச் சான்று நகல் - 2, 100 நாள் வேலைத்திட்ட அட்டை நகல் - 2 ஆகியவற்றுடன் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT