திருப்பூர்

அசோகா சக்ரா விருது: தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் இயற்கை சீற்றம், தீ விபத்து, திருட்டு உள்ளிட்டவற்றில் பொதுமக்களைக் காப்பாற்றி சாதனை புரிந்த தனி நபா்கள் மத்திய அரசின் அசோகா சக்ரா-2022 விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இயற்கை சீற்றம், விபத்து, தீ விபத்து, திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை, தீவிரவாத ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றி சாதனை புரிந்த தனி நபா்களுக்கு குடியரசு தின விழாவில் அசோகா சக்ரா விருது வழங்கப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபா்கள் இருப்பின் தகுந்த ஆதாரங்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (மே 23) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT