முகப்பு
திருப்பூர்

தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவா் பச்சாபாளையத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 35 செம்மறி ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை இரவு ஆடுகளை தோட்டத்துப் பட்டியில் அடைத்து வைத்துள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, 12 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.