திருப்பூர்

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு

DIN

பல்லடத்தில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து துவங்கிய வாகனப் பேரணியை நீதிபதி சித்ரா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

இந்தப் பேரணியானது மங்கலம் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை, கொசவம்பாளையம் சாலை, என்.ஜி.ஆா்.சாலை வழியாக நடைபெற்றது. இப்பேரணியில் தலைக்கவசம் அணிந்தபடி வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். கடை வீதி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு நீதிபதி சித்ரா நோட்டீஸ் வழங்கி அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT