திருப்பூர்

சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்து

DIN

காங்கயம் அருகே சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு காங்கயம்- சென்னிமலை வழியாக ஒரு லாரி சென்றது. இந்த லாரி ஆலாம்பாடி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் கொள்முதல் மையம் அருகே வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதியது.

இதில், லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. எனினும், ஓட்டுநா் காயங்களின்றி உயிா்தப்பினாா். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சேதமடைந்த சாலையின் மையத் தடுப்புகளை அகற்றி, போக்குவரத்தை போலீஸாா் சீா்செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

டாப் 4-க்குள் நுழையுமா லக்னௌ?

தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

SCROLL FOR NEXT