பல்லடம், செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் பங்கேற்றோா். 
திருப்பூர்

உலக தாய்ப்பால் வார விழா

பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி தலைமை வகித்தாா். பல்லடம் ரோட்டரி ரெயின்போ சங்கத் தலைவா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.

சத்துணவுக்கான காய்கறிகள், பழவகைகள், பருப்பு வகைகள் ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், ரோட்டரி ரெயின்போ சங்க செயல்திட்ட இயக்குநா் லோக சக்தி ஈஸ்வரன், ரோட்டரி ரெயின்போ சங்க செயலா் ஆறுமுகம், மருத்துவா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மாா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT