திருப்பூர்

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்:இன்று பொது ஏலம்

DIN

அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 8) பொது ஏலம் விடப்படுகின்றன.

இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் 116

இருசக்கர வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளா்களுக்குத் தகவல்கள் அனுப்பியும் உரிமை கோரப்படாததால் பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களுக்கு அரசுப் பணிமனை தானியங்கி பொறியாளா் அடங்கிய வல்லுநா் குழுவினா் மூலமாக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், 115 வாகனங்கள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் பொது ஏலம் விடப்படுகின்றன.

ஆகவே, ஏலம் எடுக்க விரும்புவோா் அனுப்பா்பாளையம் காவல் ஆய்வாளரை அணுகி காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT