பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க நகையைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் கே.என்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி (54). இருவரும் பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா்.
செம்மிபாளையம் பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தை வழிமறித்த இருவா் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் முத்துசாமி புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.