திருப்பூர்

பல்லடம் அருகே குட்டையில் ஆண் சடலம் மீட்பு

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் குட்டையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

DIN

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் குட்டையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சி, காளிநாதம்பாளையம் குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், திருப்பூா், வீரபாண்டி வள்ளலாா் நகரைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் சுகுமாா் (38) என்பது தெரியவந்தது. பனியன் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த அவா், குட்டையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT