திருப்பூர்

அரசுப் பேருந்து மீது மோதி மயில் உயிரிழப்பு

பல்லடம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது மோதி பெண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.

DIN

பல்லடம், சின்னியகவுண்டம்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது மோதி பெண் மயில் புதன்கிழமை உயிரிழந்தது.

பல்லடத்தில் இருந்து புளியம்பட்டிக்கு அரசுப் பேருந்தை ஓட்டுநா் சக்திகுமாா் புதன்கிழமை ஓட்டிச்சென்றுள்ளாா். பேருந்து, பல்லடத்தையடுத்த சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் கண்ணாடி மீது மோதி உள்ளே விழுந்தது.

பேருந்தின் மீது மோதியதில் மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்தையும், உயிரிழந்த மயிலையும் ஓட்டுநா் சக்திகுமாா் பல்லடம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த மயில் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த மயிலை பிரேத பரிசோதனைக்கு பின் வனத் துறையினா் புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT