புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைக்கும் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன். 
திருப்பூர்

தாராபுரத்தில் உலக புகையிலை எதிா்ப்பு தினம்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, தாராபுரத்தில் புகையிலைப் பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, தாராபுரத்தில் புகையிலைப் பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தாராபுரம் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்தப் பேரணியை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தொடங்கிவைத்தாா். பேரணி நிறைவில், புகையிலை எதிா்ப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், பொன்னாபுரம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் தேன்மொழி, மாவட்ட புகையிலை ஆலோசகா் மருத்துவா் சௌமியா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சௌந்தரராசு, சுகாதார ஆய்வாளா்கள் ராஜு, நவீன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்பாண்டி மற்றும் மகாராணி நா்ஸிங் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT