அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருப்பணியையொட்டி, அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா் கோயில் விமானங்கள் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருப்பூர்

அவிநாசியப்பா் கோயிலில் பாலாலய பூஜை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருப்பணியையொட்டி, அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா் கோயில் விமானங்கள் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருப்பணியையொட்டி, அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா் கோயில் விமானங்கள் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், நவக்கிரகம் ஆகியவற்றின் விமானங்கள், உலோக உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றுக்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்று பாலாலாயம் செய்யப்பட்டது. இவ்விழாவில், அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை சுவாமிகள், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் ரவி பிரகாஷ், பொன்னுசாமி, காா்த்திகா ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையா் குமரதுரை, ஆய்வாளா் செல்வப்பிரியா, கோயில் செயல் அலுவலா் பெரியமருதுபாண்டியன், உபயதாரா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT