ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:24 PM
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 492 விவசாயிகள், 5,292 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்தவரத்து 1,687 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 16 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
பருத்தி விலை குவிண்டால் ரூ. 6,600 முதல் ரூ. 8,393 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,600.
Advertisement
ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.