3-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் 3-ஆவது நாளாக பல்லடத்தில் வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை தமிழக அரசு விற்பனை செய்ய வேண்டும்.
நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்யும் கொப்பரையை பாரத் கோகனட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்யும் கொள்கை முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
Advertisement
2021 சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில், நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடந்த புதன்கிழமைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் ஈசன் முருகசாமி, பொதுச் செயலாளா் முத்துவிஸ்வநாதன், மாவட்டச் செயலாளா்கள் மகாலிங்கம், சதீஷ், பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.