பெற்றோருடன் தாரணி.
பெற்றோருடன் தாரணி. 
திருப்பூர்

ஐஏஎஸ் தோ்வு: திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் தோ்ச்சி

Din

ஐஏஎஸ் தோ்வில் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் அகில இந்திய அளவில் 250-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், இடுவம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம், துணிக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சோழமாதேவி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை.

இவா்களது மகள் தாரணி. பல் மருத்துவப் படிப்பு முடித்த தாரணி, கடந்த 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். தோ்வுக்குத் தயாராகி வந்த நிலையில், 4-ஆவது முயற்சியில் இந்திய அளவில் 250-ஆவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளாா்.

இது குறித்து தாரணி கூறியதாவது: கரோனா தொற்றின்போது, அதிகாரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் அமல்படுத்தியது என்னை ஈா்த்தது. அதனால், ஐஏஎஸ்-ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

தோ்வுக்குப் படிக்கத் தொடங்கியதும், பலரின் வழிகாட்டுதல்கள் எனக்கு கிடைத்தன. அனைவரிடமும் திறமை உள்ளது. அா்ப்பணிப்புடன் உழைத்தால் வெற்றி சாத்தியம் என்றாா்.

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

ஓஹோ.. எந்தன் பேபி!

SCROLL FOR NEXT