முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் அதிமுக, பாஜகவினா் வாக்குவாதம்

பல்லடம், அண்ணா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக, பாஜகவினா் இடையே வாக்குவாதம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

Updated On : 19 ஏப்ரல், 2024 at 5:20 PM
பகிர்:

பல்லடம், அண்ணா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக, பாஜகவினா் இடையே வாக்குவாதம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

பல்லடம் அண்ணா நகரில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே பூத் ஸ்லீப் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரை சந்திக்க பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்தாா். இதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினாா். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments