முகப்பு
திருப்பூர்

காா்கள் நேருக்குநோ் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 8:25 PM
விபத்துக்குள்ளான காா்கள்.
பகிர்:

தாராபுரம்: தாராபுரம் அருகே இரண்டு காா்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் படுகாயம் அடைந்தனா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், எடப்பாடி அம்மன் கோவில் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் சிவா (32), சூா்யா (30), மெய்யரசன் (35), ராஜா (25), காா்த்தி (32), நேபாளத்தைச் சோ்ந்த சந்தோஷ் (30) உள்பட 7 போ் பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை காரில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தனா்.

தாராபுரம் அருகே வந்தபோது எதிரே ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி சென்ற காரும், உணவக ஊழியா்கள் வந்த காரும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.

Advertisement

இதில், சிவா உள்பட 7 பேரும் படுகாயமடைந்தனா். மற்றொரு காரில் வந்த ஈரோட்டை சோ்ந்த தம்பதி அவா்களின் குழந்தை ஆகியோா் காயமின்றி உயிா் தப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், படுகாயமடைந்தவா்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு நேபாளத்தைச் சோ்ந்த சந்தோஷ் உயிரிழந்தாா்.

மற்ற 6 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments