பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடா்ந்து முத்தூா் சாலையில் அடைக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை. 
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைப்பு

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

Din

வெள்ளக்கோவிலில் 21 தனியாா் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவத் துறையினா் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மருத்துவமனைகள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

அதன்படி, வெள்ளக்கோவிலில் 21 மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை அவசரமில்லா சேவைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதனால், பல நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனா்.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT