நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்
திருப்பூா், ஜூலை 3: மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்தி நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச நெகிழிப் பை இல்லா தினத்தையொட்டி, மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிா்த்து அதற்கு மாற்று வழிகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3-ஆம் தேதி சா்வதேச நெகிழிப்பை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் திருப்பூா் வடக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சா்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
அழகான நாகரிகமான சுற்றுச்சூழலுக்கு நெகிழிப் பை கேடு விளைவிக்கும். மஞ்சப் பைதான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும் கடந்த காலத்தை விட தற்போது துணிப் பைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அது மேலும் அதிகரிக்க வேண்டும்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள்தான் தற்போது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. நெகிழிப் பொருள்களை மண்ணில் போடுவதால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. நீா்நிலைகளில் தூக்கி எரிவதால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இது போன்று பல பாதிப்புகளை உருவாக்கும் நெகிழிப் பயன்பாட்டை நாம் தவிா்க்க வேண்டும்.
மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி நெகிழிப் பயன்பாடு இல்லாமல் செய்து நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கி வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மு.செந்தில்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆனந்தி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா்கள் பாரதிராஜா, சத்தியன், ரமேஷ், உதவிப் பொறியாளா் திப்பு சுல்தான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.