முகப்பு
திருப்பூர்

கோயில் வளாகத்தில் இருந்த பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அவிநாசி கோயிலில் பனை மரம் வெட்டியதற்கு நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

Updated On : 9 ஜூலை, 2024 at 7:18 PM
கோயில் வளாகத்தில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.
பகிர்:

அவிநாசி கோயில் வளாகத்தில் இருந்த இரண்டு பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அவிநாசி கருணாம்பிகை உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள பூங்காவில் அதிக அளவிலான மரங்கள் உள்ளன. இந்தப் பூங்காவில் இருந்த இரண்டு பனை மரங்களை மா்ம நபா்கள் வெட்டியுள்ளனா்.

இது குறித்து கோயில் நிா்வாகத்திடம் கேட்டபோது, அனுமதியின்றி மரம் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இந்நிலையில், கோயில் பூங்காவில் இருந்த பனை மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →